100 மணி நேரத்தில் கொரோனா வைரஸை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஒருவேளை ஏதேனும் ஒருநாடு கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தாலும் அது மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும்.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை ஒழிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன



