இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1887ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்கள் மூவரும் கல்பிடிய தனிமைப்படுத்தில் முகாம்களில் இருந்தவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1287ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 35 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



