இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு அஜித் மன்னம்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து, பதற்றமான சூழல் ஏற்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்தை பறிப்பதில் சபாநாயகர் எடுத்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நடவடிக்கைகளுக்கு கருப்பு பட்டிகள் அணிந்தனர்.

எதிர்கட்சிகளின் கொந்தளிப்பினால் நாடாளுமன்றம் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

https://www.facebook.com/harshadesilvamp/videos/932115707329860/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here