கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1561 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 781 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அத்துடன் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



