நாடளாவிய ரீதியில் 209 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 30 – 40 மருத்துவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பால் மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கேகாலை பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் ராகம மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

மருத்துவத் துறையில் இருந்து பலர் வெளியேறியதால் பெரும் நெருக்கடி எழுந்துள்ளது என்று தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் கொழும்பு தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த 27 மருத்துவர்கள் மற்றும் ஹோமாகம மருத்துவமனையைச் சேர்ந்த 17 மருத்துவர்கள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here