கொரோனா தொற்று அதிகரிப்பால் வெழிநாடுகளில் இருந்து நாட்டுக்கு திரும்பி வரமுடியாதவர்களை மீட்டு வரும் வேளையில் கட்டாரில் இருந்து இன்று காலை 10 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
குறிப்பாக இன்றையதினம் இவ்வாறு வருகை தந்தவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 171 பேர் இன்று தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
<



