20வது திருத்தத்தை எம்மால் நாடாளுமன்றில் தோற்கடிக்க முடியாது. நாட்டு மக்கள் துரதிஷ்டவசமாக அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே 20வது திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பை பலப்படுத்தவே முயற்சிக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“சர்வதேச நாடுகளை பகைத்துக் கொண்டு, தனித்து அரசாங்கத்தால் செயற்பட முடியாது. அரசியலமைப்பின் 20வது திருத்தத்தினால் உலகில் உள்ள பல ஜனநாயக நாடுகள் எமது தாய் நாட்டினை புறக்கணிக்கும் நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .



