கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டிற்கு வரமுடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த 156 இலங்கை மாணவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 303 என்ற விசேட விமானம் இன்று மாலை 4.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.
இவ்வாறு வருகை தந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்



