திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கற்குழியில், 04 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கவனிப்பார் அற்று, காடு மண்டியிட்டுக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பயன்பாடற்ற விதத்தில் அரச கட்டடம் காணப்படுவதால் இதற்குள் சமூகவிரோத செயல்கள் இடம்பெறலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருப்பு முதல் ஏனைய அரச தேவைகளுக்காக கட்டடங்களுக்கான பற்றாக்குறை நிலவும் நிலையில், மேற்படிக் கட்டடம் இவ்வாறு காட்சியளிப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு, மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே, இதனைப் புதுப்பித்து, மக்கள் பயனடைய வழியேற்படுத்துமாறும், பிரதேச மக்கள் கோருகின்றனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here