தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (15) எட்டு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் தாங்கி மற்றும் நீர் விநியோக குழாய்கள் துப்பரவு செய்ய விருப்பதனாலே தற்காலிகமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு துப்பரவு பணி நிறைவு பெற்றவுடன் மீண்டும் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும்
காலை 08 மணிமுதல் மாலை 04 மணிவரை எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தலவாக்கலை லிந்துலை நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.



