பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர், சிறந்த உடல்நலத்துடன், தனது பணிகளை வழமை போன்று செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என யோஷித்த ராஜபக்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here