வவுனியா – மாமடு பகுதியில் நபர் ஒருவர் தனது மாட்டை கடித்தமைக்காக 15 நாய்களை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.
குறித்த நபரது மாடு மற்றும் அதன் கன்றை நாயொன்று கடித்து காயப்படுத்தியுள்ளது, இதனால் கோபமடைந்த குறித்த நபர் விஷம் கலந்த இறைச்சியை வைத்து நாய்களை கொன்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



