குருநாகல் மாவட்டத்தில் வாரியபோலா மாமுனுவா என்ற பிரதேசத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை (01) மாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததோடு, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பவுசர் ஒன்றே தீப்பிடித்துள்ளது.
குறித்த பவுசர் தீப்பிடித்ததோடு, எரிவாயு நிலையத்தில் உள்ள எரிபொருள் குழாய்கள் மற்றும் நிலையத்தின் கூரை வரை பரவியுள்ளது.
அதேவேளை, மாலை 6.39 மணியளவில் குருநாகல் நகராட்சி மன்ற தீயணைப்பு படையினரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வாகனத்தில் மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு, தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் கூறப்பட்டது.



