கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வழக்கின் இறுதி தீர்ப்பு இன்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் நீதி மன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டது
இதில் ஹிஸ்புல்லா அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது
மேலும் சுய முடிவின் பெயரில் அவரால் வேண்டும் என்றே இடமாற்றம் வழங்கப்பட்டமையும் நிரூபிக்கப்பட்டது
எனவே ஹிஸ்புல்லா அவர்களால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் அத்தனையும் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, மேலும் இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ஜ.எம்.மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.



