கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் பத்தாவது மாடியில் இருந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் கொழும்பு-கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னணி தொழிலதிபரின் 30 வயதுடைய புதல்வர் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here