அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானவை என்பதால் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வேலைக்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.

முகக்கவசங்களை அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது பணியிடங்களிலும் பொது இடங்களிலும் முறையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரத்தில் பெரும்பான்மையான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடந்துகொள்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

ஆனால் இவை இல்லாத ஒரு சிறிய குழு இருக்கலாம். கொரோனாவின் இரண்டாவது அலை ஒருவரிடமிருந்து பரவி நாடு முழுவதும் 90,000 க்கும் அதிகமானோரை பாதிப்புக்குள்ளாக்கியது.

எங்களுக்கு அத்தகைய அனுபவம் இருந்தது. மற்ற நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்போது இந்த நாட்டை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறோம் என்றார்.

புத்தாண்டின் போது, நாங்கள் பல கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனால், சில தடைகள் விதிக்கப்பட்டன. ஏனெனில் இது அவசியமானது.

சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் சுதந்திரத்தை அனுபவிக்க முயன்றனர். நோய் பரவுவதைத் தடுக்க பொது ஒத்துழைப்பு முக்கியமானது என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here