பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் இலங்கையின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய திணைக்களம் மிகமுக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி குறித்த வெட்டுக்கிளிகள், தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடன் அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 1920 என்ற உடனடி அழைப்பு இலக்கமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி விவசாயிகள் தகவல் வழங்க முடியும் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here