விசேட வர்த்தமானி அறிவித்தல் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிற்கு மத்தியில் பொதுமக்களின் வாழ்க்கையை மீள ஆரம்பிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையினை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகயிருந்தது, எனினும் அது தாமதமாகியுள்ளது.இதேவேளை குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அது விரைவில் வெளியாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



