ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த மேலும் சுமார் 02ஆயிரம் பேரை இன்று (13) தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் மத்திய கொழும்பு பகுதிகளில் தங்கியிருந்த, நுவரெலியா, பதுளை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இவ்வாறு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தமது வீடுகளுக்கு சென்றதும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.



